search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள் வளாகம்"

    அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஆப்பிள் நிறுவனம் புது வளாகத்தை கட்டமைக்க 100 கோடி டாலர்களை செலவிட முடிவு செய்துள்ளது. #Apple



    உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்படும் ஆப்பிள் ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பு பெற்ற முதல் நிறுவனமாக உருவெடுத்தது. இந்நிலையில் அமெரிக்க சந்தையில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் அந்நிறுவனம் 100 கோடி டாலர்கள் செலவில் புது வளாகத்தை கட்டமைக்க இருக்கிறது.

    புதிய ஆப்பிள் வளாகம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் அமைய இருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவில் புது வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். இதுதவிர சீட்டிள், சான் டீகோ மற்றும் கல்வர் சிட்டி உள்ளிட்ட இடங்களில் வளாகங்களை கட்டமைக்க இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.



    இந்த ஆண்டு மட்டும் ஆப்பிள் நிறுவனம் 6000 வேலைவாய்ப்புகளை உருவாக்கி சுமார் 90,000 பேரை பணியமர்த்தி இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கலிபோர்னியாவின் ஆப்பிள் பார்க் கேப்பசினோ வளாகத்தில் மட்டும் சுமார் 12,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    ஆப்பிளின் புதிய ஆஸ்டின் வளாகம் தற்போதைய வளாகத்திற்கு ஒரு மைல் தொலைவில் உருவாகிறது. இந்த வளாகத்தில் ஆய்வு, பொறியியல், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் சார்ந்த பணிகள் நடைபெற இருக்கின்றன. புதிய ஆப்பிள் வளாகம் திறக்கப்படும் போது ஆஸ்டின் நகரில் அதிகம் பேர் பணியாற்றும் தனியார் நிறுவனமாக இருக்கும். 

    ஆஸ்டினில் உருவாகும் புதிய ஆப்பிள் வளாகம் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது. இங்கு 100 சதவிகிதம் மாற்று எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. #Apple
    ×